Crime

சென்னை: வடசென்னையை கலக்கிய பிரபல ரவுடி காக்கா தோப்பு பாலாஜி என்கவுன்ட்டரில் கொல்லப்பட்டார். போலீஸாரை நோக்கி துப்பாக்கியால் சுட்டபோது எதிர்தாக்குதல் நடத்தியதில் உயிரிழந்தார். அவர் மீது கொலை, கொலை முயற்சி, மாமூல் கேட்டு மிரட்டல் உட்பட 59 வழக்குகள் உள்ளன.

ரவுடிகள் ஒழிப்பு பணியை சென்னை காவல் ஆணையர் முடுக்கிவிட்டுள்ளார். அதன் ஒருபகுதியாக ரோந்து பணி தீவிரப்படுத்தப்பட்டுள்ளது. அதன்படி மகாகவி பாரதியார் நகர் காவல்உதவி ஆய்வாளர் நாதமுனி, காவலர் சுகன் ஆகியோர் நேற்றுமுன்தினம் இரவு வாகன சோதனையில் ஈடுபட்டிருந்தனர். நேற்று அதிகாலை 4.32 மணியளவில் முல்லை நகர் சந்திப்பின் பாலம் அருகே அந்த வழியாக வந்த வாகனங்களை சோதனை செய்து கொண்டிருந்தனர். அப்போது, அந்த வழியாக வந்த கார் ஒன்றை மறித்து அதில் ஓட்டுநர் அருகில் இருந்த நபரை கீழே இறக்கி விசாரித்துக் கொண்டிருந்தபோது, திடீரென்று அந்த காரில் இருந்த ஓட்டுநர் காரை அதிவேகமாக ஓட்டிச் சென்று தப்பினார்.



from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம் https://ift.tt/327WJav

Post a Comment

0 Comments