
பெங்களூரு: கன்னட திரையுலகின் முன்னணி நடிகர் தர்ஷன் (47) தனது காதலியும் நடிகையுமான பவித்ரா கவுடாவை சமூக வலைதளத்தில் சீண்டிய ரேணுகா சுவாமி (33) என்பவரை கொன்ற வழக்கில் கடந்தஜூன் 11-ம் தேதி கைது செய்யப்பட்டார். நடிகை பவித்ரா கவுடா, தர்ஷனின் மேலாளர் நாகராஜ், ரசிகர் மன்ற தலைவர் ராகவேந்திரா, பவுன்சர்கள் கார்த்திக், மஞ்சுநாத் உட்பட 17 பேர் அடுத்தடுத்து கைது செய்யப்பட்டனர்.
இவ்வழக்கை விசாரித்த பெங்களூரு கூடுதல் ஆணையர் கிரீஷ் நேற்று முன் தினம் பெங்களூரு மாநகரத்தின் 29-வது முதன்மை அமர்வு நீதிமன்றத்தில் 3,991 பக்க குற்றப்பத்திரிகையை தாக்கல் செய்தார். அதில் ப‌வித்ரா கவுடா முதல் குற்றவாளியாகவும், தர்ஷன் 2-வது குற்றவாளியாகவும் சேர்க்கப்பட்டுள்ளனர். 231 சாட்சிய‌ங்களின் அடிப்படையில் 17 பேர் மீதும் குற்றச் சாட்டுகள் சுமத்தப்பட்டுள்ளது.
from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம் https://ift.tt/IXyhdVa
0 Comments