
ஈரோடு: ஈரோடு மாவட்டம் கோபிசெட்டி பாளையத்தைச் சேர்ந்தவர் அருண் ரங்கராஜ் (38). ஐபிஎஸ் அதிகாரியான இவர்,2012-ல் கர்நாடக மாநிலம் கலாபுர்கிமாவட்டத்தில் காவல் கண்காணிப்பாளராக பணியாற்றி வந்தார். அப்போது, உடன் பணிபுரிந்த பெண் உதவி ஆய்வாளருடன் பழக்கம் ஏற்பட்டது. இதையறிந்த அருண் ரங்கராஜின் மனைவி, கணவரைப் பிரிந்து சென்றார்.
இந்நிலையில், கடந்த பிப்ரவரி மாதம்பெண் உதவி ஆய்வாளருடன் கோபிசெட்டிபாளையத்தில் உள்ள பெற்றோர் வீட்டுக்கு அருண் ரங்கராஜ் வந்துள்ளார். அப்போது அவர்களிடையே ஏற்பட்டதகராறில், உதவி ஆய்வாளர் தாக்கப்பட்டுள்ளார். இது தொடர்பாக வழக்கு பதிவு செய்த கோபி போலீஸார் அருண் ரங்கராஜை கைது செய்தனர். பின்னர் அவர் சஸ்பெண்ட் செய்யப்பட்டு, சிலநாட்களுக்குப் பின்னர் பணியில் சேர்க்கப்பட்டார்.
from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம் https://ift.tt/vjd9aJx
0 Comments