
கோவை: கோவை உக்கடம், கோட்டை ஈஸ்வரன் கோயில் அருகே கடந்த 2022-ம் ஆண்டு , அக்டோபர் மாதம் 23-ம் தேதி கார் வெடிப்புச் சம்பவம் நடந்தது. இதில் காரை ஓட்டி வந்த உக்கடத்தை சேர்ந்த ஜமேஷா முபின் (28) என்பவர் உயிரிழந்தார். இச்சம்பவம் தொடர்பாக தற்போது என்ஐஏ எனப்படும் தேசிய புலனாய்வு முகமை பிரிவு அதிகாரிகள் விசாரித்து வருகின்றனர்.
இவ்வழக்கில் தொடர்புடையவர்கள் தொடர்ச்சியாக கைது செய்யப்பட்டு வருகின்றனர். இச்சம்பவம் தொடர்பாக தற்போது வரை 14 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். இதன் தொடர்ச்சியாக கோவை உள்ளிட்ட பல்வேறு இடங்களில் என்.ஐ.ஏ அதிகாரிகள் தொடர் சோதனைகள் நடத்தினர். அதில், கோவையில் நடத்தப்பட்ட சோதனையில், அரபிக் கல்லூரியில் ஐ.எஸ்.ஐ.எஸ் பயங்கரவாத அமைப்புக்கு ஆட்களை திரட்ட மூளைச்சலவை செய்தது உள்ளிட்டவை தொடர்பான வாசகங்கள் கண்டெடுக்கப்பட்டன. இது தொடர்பாக என்.ஐ.ஏ சென்னை பிரிவு அதிகாரிகள் தனியாக வழக்குப் பதிந்தனர்.
from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம் https://ift.tt/NrV3Kom
0 Comments