
திருவாரூர்: மன்னார்குடி அருகே, திமுக பிரமுகர் கொலை வழக்கில் கைதாகி ஜாமீனில் வெளியே வந்த நபரை இன்று மூன்று பேர் கொண்ட மர்மக் கும்பல் அரிவாளால் வெட்டி படுகொலை செய்தது.
திருவாரூர் மாவட்டம், மன்னார்குடி அருகே நடுவகளப்பால் பகுதியைச் சேர்ந்தவர் மாரிமுத்து ( 54). இவர் இன்று தனது மகளின் வளைகாப்பு நிகழ்ச்சிக்காக பொருட்களை வாங்குவதற்கு தனது சைக்கிளில் களப்பால் கடைவீதிக்கு வந்துள்ளார். அப்போது இருசக்கர வாகனத்தில் முகத்தில் கைக்குட்டையைக் கட்டிக்கொண்டு வந்த மூன்று நபர்கள், பயங்கர ஆயுதங்களால் மாரிமுத்துவை சரமாரியாக வெட்டினர். இதில் மாரிமுத்து சம்பவ இடத்திலேயே துடிதுடித்து உயிரிழந்தார்.
from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம் https://ift.tt/hFJ9eRq
0 Comments