
சென்னை: துபாயில் நடன நிகழ்ச்சி என, சினிமாவில் வாய்ப்பு குறைந்த துணை நடிகைகள், நடன அழகிகள்,இளம் பெண்கள் உட்பட பலரை அழைத்துச் சென்று அங்கு நட்சத்திர ஓட்டல்களில் அடைத்து வைத்து சென்னையைச் சேர்ந்த கும்பல் பாலியல் தொழிலில் ஈடுபடுத்தி வருவதாக குற்றச்சாட்டு எழுந்தது.
மேலும், அக்கும்பல் சென்னை மற்றும் தமிழகத்தில் பிற மாவட்டங்களில் வறுமையிலுள்ள, வேலை தேடும் மற்றும் சொகுசு வாழ்க்கைக்கு ஆசைப்படும் பெண்களை குறிவைத்து அவர்களுக்கும் துபாயில் வேலை வாங்கித் தருவதாகவும், மேலும் ஓட்டலில் நடனமாடும் வேலை பெற்றுத் தரப்படும் எனவும்,மாதம் ரூ.50 ஆயிரத்துக்கு மேல் சம்பளம், உணவுடன் கூடிய தங்கும்இடம் எனவும் விளம்பரம் செய்தது.
from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம் https://ift.tt/CI3sYwB
0 Comments