
சென்னை: வேலைவாய்ப்புகளுக்காக சுற்றுலா விசாவில் வெளிநாடுகளுக்கு செல்ல வேண்டாம் என மாநிலசைபர் க்ரைம் பிரிவு கூடுதல் டிஜிபி சந்தீப் மித்தல் அறிவுறுத்தியுள்ளார்.
இதுகுறித்து அவர் வெளியிட்டசெய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது: வெளிநாடுகளில் வேலைதேடும்மக்களை சில போலி முகவர்கள்கவர்ச்சிகரமான வேலைவாய்ப்புகளை காட்டி ஏமாற்றி, சுற்றுலா விசா மூலம் வெளிநாடுகளுக்கு அனுப்பி வைத்து வருகின்றனர். இந்தியாவிலிருந்து வெளிநாடுகளில் வேலை தேடுபவர்களை குறிவைத்து, அதிக சம்பளத்தில் வேலைவாய்ப்பு தருவதாகக் கூறிஇம்முகவர்கள் வேலைக்கு அழைத்துச் செல்கின்றனர்.
from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம் https://ift.tt/joU4yOI
0 Comments