
புதுச்சேரி: பழைய நாணயங்களுக்காக வாங்குவதாக இணையத்தில் வந்த விளம்பரத்தை நம்பி வில்லியனூர் இளைஞர் ஒருவர் ரூ 45 ஆயிரத்தை மோசடி கும்பலிடம் இழந்துள்ளதாக சைபர் கிரைம் போலீஸார் தெரிவித்தனர்.
வில்லியனூரை சேர்ந்த ஒருவர் பழைய நாணயங்கள் சேகரிப்பதில் ஆர்வம் உடையவராக இருந்துள்ளார். இவர் சமீபத்தில் தன்னுடைய பேஸ்புக் பக்கத்தில் பழைய நாணயங்களுக்கு அதிக விலை கொடுத்து வாங்குகிறோம் என்று வந்த ஒரு விளம்பரத்தைப் பார்த்து அதை கிளிக் செய்து அதன் உள்ளே சென்று பல்வேறு விவரங்களை தேடி உள்ளார். அப்போது மர்ம நபர்கள் அந்த வாலிபரை தொடர்பு கொண்டு உங்களிடம் இருக்கின்ற நாணயத்தின் புகைப்படத்தை எங்களுக்கு அனுப்புமாறும் எத்தனை வருடம் பழமை வாய்ந்தது என்பதை எங்களால் கண்டுபிடிக்க முடியும் என்றும் அதற்கு எவ்வளவு தொகை வேண்டுமானாலும் தருகிறோம் என்றும் கூறியுள்ளனர்.
from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம் https://ift.tt/jNblZX5
0 Comments