
தஞ்சை: வெளிநாட்டுக்கு கடத்த முயன்ற ரூ.22 கோடி மதிப்பிலான 6 ஐம்பொன் சிலைகளை, சிலைக் கடத்தல் தடுப்புப் பிரிவு சிறப்பு குழு போலீஸார் பறிமுதல் செய்தனர்.
தஞ்சாவூர் - திருச்சி தேசிய நெடுஞ்சாலை பகுதியில், சிலை கடத்தல் தடுப்புப் பிரிவு திருச்சி சிறப்பு குழுவினர் கடந்த 6-ம் தேதி வாகனச் சோதனையில் ஈடுபட்டனர். அப்போது, அவ்வழியாக வந்த காரை சோதனை செய்தபோது, 3 அடி உயர திரிபுராந்தகர், 2.75 அடி உயர வீணாதார தட்சிணாமூர்த்தி, 3.25 அடி உயர ரிஷப தேவர், தலா 2.75 அடி உயர மூன்று அம்மன் சிலைகள் என ஆறு உலோக சிலைகளை, சிலை கடத்தல் தடுப்புப் பிரிவு போலீஸார் பறிமுதல் செய்தனர்.
from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம் https://ift.tt/gFAPMcq
0 Comments