
சென்னை: சென்னை வியாசர்பாடி, சுந்தரம் 4-வது தெருவை சேர்ந்தவர் ராஜ்குமார் (38). இவரது மனைவிவிஜயலட்சுமி. இத் தம்பதிக்கு ஏற்கெனவே 2 பெண் குழந்தைகள் உள்ளனர். இந்நிலையில், கடந்த மாதம் இவர்களுக்கு 3-வதாக மீண்டும்பெண் குழந்தை பிறந்துள் ளது. இதனால், ராஜ்குமார் விரக்தி யில் இருந்துள்ளார்.
இந்நிலையில், கடந்த 7-ம் தேதி, குழந்தையை தூங்க வைத்து விட்டு தாய் விஜயலட்சுமி வீட்டின் வெளியேஅமர்ந்து பேசிக்கொண்டிருந்தார். திடீரென குழுந்தையின் அழுகுரல் கேட்டு வீட்டுக்குள் சென்று பார்த்தபோது குழந்தையின் வயிற்றில் 3இடங்களிலிருந்து ரத்தம் வெளியேறியது. அதிர்ச்சி அடைந்த அவர் உடனடியாக குழந்தையை மீட்டு எழும்பூர் குழந்தைகள் நல மருத்துவமனையில் சேர்த்தார்.
from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம் https://ift.tt/UfIADhP
0 Comments