
கடலூர் மாவட்டம் நெல்லிக்குப்பத்தை அடுத்த காரமணிக்குப் பத்தில் 3 பேர் எரித்து கொலை செய்யப்பட்ட சம்பவத்தில் அதே பகுதியை சேர்ந்த இரு இளைஞர்களிடம் போலீஸார் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.
கடலூர் மாவட்டம் நெல்லிக்குப்பத்தை அடுத்த காராமணிக்குப்பம் ராஜா நகரைச் சேர்ந்தவர் சுரேஷ்குமார். மருந்தாளநராக பணியாற்றி ஓய்வு பெற்றவர். இவரது மனைவி கமலீஸ்வரி (60). இதில் சுரேஷ்குமார் கடந்த 6 மாதத்துக்கு முன் உயிரிழந்து விட்டார். மூத்த மகன் சுரேந்திரகுமார் (42), ஆந்திர மாநிலம் காக்கிநாடாவில் வசித்து வருகிறார். அவரது இளையமகன் சுகந்த்குமார்(40) ஹைதராபாத்தில் ஐடி நிறுவனத்தில் பணி செய்துவந்தார். மாதத்தில் 15 நாட்கள் அங்கும், மீத 15 நாட்கள் ‘ஒர்க் ப்ரம் ஹோம்’ அடிப்படையில் நெல்லிக்குப்பத்தில் தனது தாய் மற்றும் தனது மகன் நிஷாந்த் (10) ஆகியோருடன் வசித்து வந்தார்.
from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம் https://ift.tt/BrWf10F
0 Comments