Crime

கடலூர்: கடலூரில் பாமக பிரமுகரை வெட்டிய வழக்கில் 5 பேரை போலீஸார் கைது செய்துள்ளனர். இதனையடுத்து இன்று (ஞாயிற்று கிழமை) மதியம் 5 பேர் மீதும் வழக்குப் பதிவு செய்து கைது செய்து போலீஸார் சிறையில் அடைத்தனர்.

கடலூர் திருப்பாதிரிப்புலியூர் சூரப்ப நாயக்கன் சாவடி பகுதியைச் சேர்ந்தவர் மகாலிங்கம் மகன் சங்கர் என்கின்ற சிவசங்கர்(43). கேபிள் டிவி தொழில் நடத்தி வருகிறார். இவர் பாமக பிரமுகர். நேற்று பிற்பகல் வீட்டு வாசலில் அவர் நின்று கொண்டிருந்தபோது பைக்குகளில் வந்த மர்ம நபர்கள் இவரை சரமாரியாக அரிவாளால் வெட்டியுள்ளனர்.



from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம் https://ift.tt/6GFxfL5

Post a Comment

0 Comments