Crime

தாராபுரம்: திருப்பூர் மாவட்டம் தாராபுரத்தைச் சேர்ந்த மகேஷ் அரவிந்த் என்பவர், செல்போன் செயலி மூலம் அறிமுகமான ஈரோடு மாவட்டம் கொடுமுடியைச் சேர்ந்த சந்தியாவை (30) கடந்த ஜூன் மாதம் திருமணம் செய்துள்ளார். அப்போது, சந்தியாவுக்கு 12 பவுன் நகை வாங்கிக் கொடுத்துள்ளனர்.

சுமார் 3 மாதங்களுக்குப் பிறகு சந்தியாவின் நடவடிக்கையில் சந்தேகமடைந்த மகேஷ் அரவிந்த், அவரிடம் விசாரித்துள்ளார். அப்போது, சந்தியா முன்னுக்குப் பின்முரணான தகவல்களை தெரிவித்ததால், அவரை தாராபுரம் அனைத்துமகளிர் காவல் நிலையத்துக்கு அழைத்துச் சென்றார். போலீஸார் விசாரித்துக் கொண்டிருக்கும்போதே, சந்தியா அங்கிருந்து தப்பியுள்ளார்.



from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம் https://ift.tt/OVCiZwg

Post a Comment

0 Comments