
சென்னை: தமிழகம், ஆந்திரா, மகாராஷ்டிரா உட்பட பல்வேறு மாநிலங்களில் தொழிலதிபர்களிடம் பண மோசடி செய்ததால் கைது செய்யப்பட்ட கும்பல் தலைவனை காவலில் எடுத்து விசாரிக்க போலீஸார் முடிவு செய்துள்ளனர். இதுகுறித்து போலீஸ் தரப்பில் கூறப்படுவதாவது:
ஆந்திராவை சேர்ந்த தொழிலதிபர் சனிவரப்பு வெங்கடசிவ ரெட்டி. ரூ.100 கோடி கடன் பெற்று தருவதாக இவரிடம் கூறிய மர்ம கும்பல், ரூ.2 கோடி முன்பணத்தை வாங்கிக்கொண்டு தலைமறைவாகிவிட்டதாக சென்னை காவல் ஆணையரிடம் கடந்த ஆண்டு நவம்பரில் புகார் கொடுத்தார்.
from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம் https://ift.tt/IB0ZS15
0 Comments