
பல்லாவரம்: குன்றத்தூரை அடுத்த திருமுடிவாக்கம் பகுதியில் வசித்து வருபவர் அசாருதீன் (33). இவர், குரோம்பேட்டையில் மருந்தகம் நடத்தி வருகிறார். இவரது மெடிக்கல் கடையில் வியாபாரம் நன்றாக இருப்பதை கவனித்த ஒரு கும்பல் 10 நாட்களாக இவரை பின்தொடர்ந்துள்ளது. இந்நிலையில், கடந்த 22-ம் தேதி அசாருதீன் தனது மோட்டார் சைக்கிளில் தனியாக வீட்டுக்குச் சென்று கொண்டிருந்ததைப் பார்த்த அக்கும்பல் ஒரு காரில் வந்து திருநீர்மலை பிரதான சாலையில் அவரை மடக்கியது.
காரில் இருந்து இறங்கிய கும்பல், தங்களை போலீஸ் என்று கூறிக் கொண்டு,அசாருதீன் சட்டவிரோதமாக மருந்து விற்பனையில் ஈடுபட்டு வருவதாகவும், அவரை விசாரிக்க வேண்டும் எனவும் கூறி, அவரது கண்களைக் கட்டி பம்மல் அருகே உள்ள ஒரு சுடுகாட்டுக்கு அழைத்துச் சென்றனர்.
from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம் https://ift.tt/rqk8Dsn
0 Comments