Crime

சென்னை: தண்டையார்பேட்டை பகுதியில் தண்டவாளத்தில் அமர்ந்து மது அருந்தியபோது, இரு தரப்புக்கு இடையே ஏற்பட்ட தகராறு முற்றியதில், இளைஞர் கொலை செய்யப்பட்டார். மற்றொருவர் பலத்த காயம் அடைந்தார்.

இதுகுறித்து கொருக்குப்பேட்டை ரயில்வே போலீஸார் விசாரித்து வருகின்றனர். சென்னை கொருக்குப்பேட்டை கஸ்தூரிபாய் நகரைச் சேர்ந்தவர் அலெக்ஸ்பாபு (22). இவர் மாநகராட்சியில் ஒப்பந்த அடிப்படையில் நாய் பிடிக்கும் வேலை பார்த்து வந்தார். இவரும் அதே பகுதியைச் சேர்ந்த பெரியப்பா மகன் மோகன்ராஜ்(37) என்பவரும் ஞாயிற்றுக்கிழமை இரவு, தண்டையார்பேட்டை ரயில்வே தண்டவாளம் (சரக்கு ரயில் செல்லும் தண்டவாளம்) அருகே மது அருந்திக் கொண்டிருந்தனர்.



from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம் https://ift.tt/HCq7ZbB

Post a Comment

0 Comments