Crime

கடலூர்: கடலூர் மாவட்டம் காராமணி குப்பத்தைச் சேர்ந்த ஓய்வுபெற்ற மருந்தாளுநரின் குடும்பத்தைச் சேர்ந்த 3 பேரின் உடல் கருகிய நிலையில் கண்டெடுக்கப்பட்டுள்ளது. இச்சம்பவம் குறித்து நெல்லிக்குப்பம் போலீஸார் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

கடலூர் மாவட்டம் நெல்லிக்குப்பத்தை அடுத்த காராமணி குப்பத்தைச் சேர்ந்தவர் சுரேஷ்குமார். இவர் ஓய்வு பெற்ற மருந்தாளுநர். இவர் தனது மனைவி கமலேஸ்வரி, பேரன் ரிஷபந்த், மகன் ரமேஷ்குமார், சுதன் குமார் ஆகியோர் வசித்து வந்தனர். இதில் ரமேஷ்குமார் உடல்நிலை குறைவால் கடந்த 6 மாதத்துக்கு முன்பு உயிரிழந்ததாக கூறப்படுகிறது. இதையடுத்து மற்றொரு மகன் சுதன் குமார் ஹைதராபாத்தில் தனியார் நிறுவனத்தில் வேலை பார்த்து வந்துள்ளார். அவரது மகன் ரிஷபந்த் தனது தாய் தந்தையரோடு வசித்து வருவதாக தெரிகிறது.



from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம் https://ift.tt/O4HbpPC

Post a Comment

0 Comments