Crime

மதுரை: மதுரையில் பள்ளிக்குச் சென்ற 7-ம் வகுப்பு மாணவனை கடத்தி ரூ.2 கோடி பணம் கேட்டு மிரட்டிய கும்பலை, சுமார் 3 மணி நேரத்தில் துரத்திப் பிடித்து மாணவனை மீட்ட போலீஸாருக்கு பாராட்டுகள் குவிந்து வருகின்றன.

மதுரை எஸ்.எஸ். காலனி பகுதியைச் சேர்ந்தவர் மைதிலி ராஜலெட்சுமி. இவருக்கு பைபாஸ் சாலை பகுதியில் காம்ப்ளக்ஸ் வீடுகள் உள்ளன. இவரது மகன் தனியார் பள்ளி ஒன்றில் 7-ம் வகுப்பு படிக்கிறார். இன்று (ஜூலை 11) காலை வழக்கம் போல் 8 மணிக்கு ஆட்டோவில் பள்ளிக்குச் சென்ற மாணவனையும், அவரை ஏற்றிச் சென்ற ஆட்டோ ஓட்டுநர் பால்பாண்டியையும் ஒரு கும்பல் கத்தி முனையில் கடத்தியது.



from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம் https://ift.tt/Yao6dub

Post a Comment

0 Comments