Crime

சென்னை: துபாயிலிருந்து பெரிய அளவில் தங்கம் சென்னைக்கு கடத்திவரப்படுவதாக விமான நிலைய சுங்கத் துறை அதிகாரிகளுக்கு ரகசியத் தகவல் கிடைத்தது. இதையடுத்து, சுங்கத் துறை அதிகாரிகள் விமான நிலையத்தில் தீவிர கண்காணிப்பில் ஈடுபட்டிருந்தனர். நேற்று அதிகாலை சென்னை வந்த விமானத்தில் வந்த பயணிகளை சோதனை செய்தனர்.

அப்போது தமிழகத்தைச் சேர்ந்த 5 பேர் சுற்றுலா பயணிகளாக துபாய் சென்றுவிட்டு வந்திருந்தனர். அவர்களை அதிகாரிகள் சோதனை செய்தபோது, உள்ளாடைக்குள் 6 தங்க செயின்கள், 7 தங்கக் கட்டிகள் உள்ளிட்டவற்றை மறைத்துவைத்திருந்தது தெரியவந்தது.



from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம் https://ift.tt/vOJYNwG

Post a Comment

0 Comments