Crime

வேலூர்: காட்பாடி சார் பதிவாளர் அலுவலகத்தில் லஞ்ச ஒழிப்புப் பிரிவு காவல் துறையினர் விடிய, விடிய நடத்திய சோதனையில் கணக்கில் வராத பணம் ரூ.2.14 லட்சம் பறிமுதல் செய்யப்பட்டது. இதன் தொடர்ச்சியாக சார் பதிவாளர் நித்யானந்தம் வீட்டில் நடத்தப்பட்ட சோதனையில் ரூ.13.74 லட்சம் ரொக்கப் பணம், 80 பவுன் தங்க நகைகள், முதலீடு பத்திரங்கள் உள்ளிட்டவற்றை பறிமுதல் செய்தனர்.

வேலூர் மாவட்டம் காட்பாடியில் சார் பதிவாளர் அலுவலகம் இயங்கி வருகிறது. இங்கு சார் பதிவாளராக நித்யானந்தம் உள்ளார். இங்கு, வேலூர் லஞ்ச ஒழிப்பு பிரிவு ஆய்வாளர் விஜய், தலைமையிலான போலீசார் நேற்று இரவு 7.45 மணியளவில் திடீர் சோதனையில் ஈடுபட்டனர். அப்போது, சார் பதிவாளர் அலுவலகத்தில் இருந்த அனைவரும் தடுத்து நிறுத்தப்பட்டனர். இந்த சோதனையின் போது புரோக்கர்கள், ரியல் எஸ்டேட் அதிபர்கள், அலுவலக ஊழியர்கள் உள்ளிட்டோர் இருந்தனர்.



from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம் https://ift.tt/XjWn0Ps

Post a Comment

0 Comments