Crime

புதுடெல்லி: உத்தரபிரதேசம் அலிகர் நகரின் முக்கியப் பகுதியில் மாமு பாஞ்சாஎன்ற பெயரில் மின்னணு பொருட்களின் சந்தை மற்றும் சில துணிக்கடைகள் அமைந்துள்ளன. இங்குமுகேஷ் சந்திர மித்தல் என்பவர்துணிக் கடை நடத்துகிறார். இதன்முதல் மாடியில் அவரது குடியிருப்பு உள்ளது.

கடந்த செவ்வாய்க் கிழமை வார விடுமுறை என்பதால் கடைகள் மூடப்பட்டிருக்க, அருகிலுள்ள படிகள் வழியாக இளைஞர் ஒருவர் முதல் மாடி குடியிருப்பில் நுழைய முயன்றுள்ளார். அவரை திருடன் என கருதி மித்தலின் மகன் ராகுல் பிடித்துள்ளார். பிறகு கும்பலால் கடுமையாக தாக்கப்பட்ட இளைஞர், மருத்துவமனைக்கு செல்லப்படும் வழியிலேயே இறந்தார்.



from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம் https://ift.tt/0vAjKy5

Post a Comment

0 Comments