
ராயபுரம் காவல் நிலைய குற்றப்பிரிவு காவலராக பணியாற்றியவர் பிரியங்கா (27). இவர் அதே காவல் நிலையத்தில் காவலராகப் பணியாற்றி வந்த சேகர் (30) என்பவரைக் காதலித்து திருமணம் செய்து கொண்டார். கடந்த ஜனவரி மாதம் இவர்களது திருமணம் நடைபெற்றுள்ளது. ராயபுரத்தில் உள்ள காவலர் குடியிருப்பில் தம்பதியர் வசித்து வந்தனர். பிரியங்கா 3 மாதகர்ப்பிணியாக இருந்ததாகக் கூறப்படுகிறது.
தொடக்கத்தில் அன்பாக இருந்த இருவருக்கும் இடையே அடிக்கடி குடும்ப விவகாரம் தொடர்பாக வாக்குவாதம் ஏற்பட்டு சண்டையாக மாறியுள்ளது. இந்நிலையில், கடந்த 31-ம் தேதி மதியம் ஏற்பட்ட சண்டையில் கணவர் சேகர் வெளியே சென்றார். திரும்பி வந்து பார்த்தபோது, வீட்டின் வரவேற்பறை மின்விசிறியில் பிரியங்கா தூக்கிட்ட நிலையில் சடலமாகக் கிடந்துள்ளார்.
from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம் https://ift.tt/sj0VFvm
0 Comments