Crime

நொய்டா: டெல்லியை அடுத்த நொய்டாவைச் சேர்ந்த தொழிலதிபர் ரஜத் போத்ரா (40). இவர் பங்குச் சந்தை வர்த்தகம் தொடர்பான ஒரு வாட்ஸ்அப் குழுவில் கடந்த மே 1-ம் தேதி இணைந்துள்ளார். அந்தக் குழுவில் பங்கு வர்த்தகத்தில் லாபம் சம்பாதிப்பது குறித்த தகவல் இடம்பெற்றதாகக் கூறப்படுகிறது. இதையடுத்து சிறிய அளவு தொகையை முதலீடு செய்து வந்துள்ளார். இதற்கு லாபமும் கிடைத்துள்ளது.

இதையடுத்து, மே 27-ம் தேதி அவர் ரூ.9.09 கோடியை முதலீடு செய்துள்ளார். அதன் பிறகு அவருடைய வங்கிக் கணக்கு மூடப்பட்டுள்ளது. இதையடுத்து அவர் இணைய குற்றப்பிரிவு காவல் நிலையத்தில் கடந்த 31-ம் தேதி புகார் செய்துள்ளார்.



from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம் https://ift.tt/Sjh014Z

Post a Comment

0 Comments