
சென்னை: திருட்டு ஆட்டோவில் சென்று, வீட்டின் பூட்டை உடைத்து கொள்ளையில் ஈடுபட்டதாக இருவரை போலீஸார் கைது செய்துள்ளனர்.
இதுகுறித்து போலீஸ் தரப்பில் கூறப்படுவதாவது: சென்னை சைதாப்பேட்டை, விஜிபி சாலை பகுதியில் வசிப்பவர் கல்யாண பெருமாள் (47). கடந்த 10-ம் தேதி மதியம் இவர் தனது வீட்டை பூட்டிவிட்டு வெளியூர் சென்றார். மறுநாள் காலை வீட்டுக்கு வந்து பார்த்தபோது, வீட்டின் பூட்டுஉடைக்கப்பட்டு உள்ளே வைத்திருந்த 13.5 சவரன் தங்க நகைகள்,பணம் ரூ.7 ஆயிரம் மற்றும் சிசிடிவிகேமராவின் டிவிஆர் ஆகியவைதிருடு போயிருந்தது தெரியவந்தது. அதிர்ச்சி அடைந்த அவர் இதுகுறித்து சைதாப்பேட்டை காவல் நிலையத்தில் புகார் அளித்தார்.
from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம் https://ift.tt/sUZtQaV
0 Comments