
தென்காசி: தென்காசி மாவட்டம் ஆலங்குளம் அருகேயுள்ள சிவலார்குளம் விலக்குப் பகுதியில் நேற்று முன்தினம் போலீஸார் வாகன தணிக்கையில் ஈடுபட்டிருந்தனர். அப்போது, சந்தேகத்துக்கிடமான வகையில், மோட்டார் சைக்கிளை நிறுத்தாமல் சென்ற 4 பேரை போலீஸார் பிடித்து விசாரித்தனர்.
விசாரணையில், அவர்கள் சிவலார்குளம் கிராமத்தைச் சேர்ந்த முத்தையா மகன்கள் மகேஷ் (26), பெர்லின் (24), கஜேந்திரா (22) மற்றும் மரிய சுந்தரம் மகன் நவீன் (27) என்பது தெரியவந்தது. அவர்களது வீட்டில் கஞ்சாவைப் பதுக்கிவைத்து, பள்ளி, கல்லூரி மாணவர்களுக்கு விற்பனை செய்ததும் தெரியவந்தது.
from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம் https://ift.tt/H6PZfub
0 Comments