
கிருஷ்ணகிரி: கிருஷ்ணகிரி அருகே தொழிற்சாலைகளில் வேலை வாங்கி தருவதற்கு பணம் தர வேண்டும் என கூறி, வடமாநிலத் தொழிலாளர்களை அறையில் அடைத்து வைத்து மிரட்டிய 9 பேரை போலீஸார் கைது செய்தனர்.
கிருஷ்ணகிரி மாவட்டம், பர்கூர், சூளகிரி, ஓசூர் பகுதிகளில் உள்ள பல்வேறு தொழிற்சாலைகளில் வட மாநிலத்தவர், ஆயிரக்கணக்கில் வேலை செய்கின்றனர். இதை சமூக வலைதளங்களில் விளம்பரப்படுத்தி தமிழகத்திற்கு வரும் வட மாநில இளைஞர்களை மிரட்டி பணம் பறிப்பது அதிகரித்துள்ளது.
from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம் https://ift.tt/9HPpSmC
0 Comments