
திருநெல்வேலி: திருநெல்வேலி காங்கிரஸ் மாவட்டத் தலைவர் ஜெயக்குமார் கொலை தொடர்பாக, காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவரான முன்னாள் மத்திய இணை அமைச்சர் தனுஷ்கோடி ஆதித்தனிடம் போலீஸார் நேற்று விசாரணை நடத்தினர். கடந்த 2-ம் தேதி மாலையில் ஜெயக்குமார் தனது வீட்டிலிருந்து காரில் தனியாகச் சென்றது சிசிடிவி கேமரா பதிவு மூலம் தெரிய வந்துள்ளது. மாயமான அவரது செல்போன்களை கண்டறியவும் போலீஸார் நடவடிக்கை மேற் கொண்டுள்ளனர்.
திருநெல்வேலி மாவட்டம், திசையன்விளை அருகே உள்ள கரைச் சுத்துபுதூர் கிராமத்தைச் சேர்ந்தவர் கே.பி.கே.ஜெயக்குமார். திருநெல் வேலி கிழக்கு மாவட்ட காங்கிரஸ் தலைவராக இருந்த இவர், கடந்த 4-ம் தேதி தனது வீட்டு அருகே உள்ள தோட்டத்தில் எரிக்கப்பட்ட நிலையில் சடலமாகக் கிடந்தார்.
from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம் https://ift.tt/3HpN7Gn
0 Comments