
பெரம்பலூர்/சென்னை: பெரம்பலூர் மாவட்டம் வேலூர்கிராமத்தை சேர்ந்தவர் ராமசாமி(50). பக்கத்து வீட்டைச் சேர்ந்தவர் சுப்பிரமணி (60). அதிமுக கிளைச் செயலாளர். கடந்த மார்ச் 24-ம் தேதி ராமசாமி மனைவிசெல்லம்மாள், சுப்பிரமணி மனைவி பிச்சாயி ஆகியோருக்கிடையே குடிநீர் பிடிப்பதில் தகராறு ஏற்பட்டது. இதுகுறித்த புகாரின்பேரில் பெரம்பலூர் போலீஸார் விசாரித்து வந்தனர்.
இதில் ராமசாமிக்கு ஆதரவாக அதே ஊரை சேர்ந்த திமுக கிளைச் செயலாளர் செந்தில்குமார் (47), சுப்பிரமணியிடம் தகராறு செய்துள்ளார். கடந்த 7-ம் தேதி வேலூர் கிராமத்தில் நடந்த அன்னப் படையல் நிகழ்ச்சியின்போது, செந்தில்குமார், சுப்பிரமணி தரப்பினரிடையே ஏற்பட்ட மோதலில், 10-க்கும் மேற்பட்டோர் காயமடைந்தனர். பலத்த காயமடைந்த அதிமுக கிளைச் செயலாளர் சுப்பிரமணி, திமுகவை சேர்ந்த கண்ணன் ஆகியோர் திருச்சி அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனர். அங்கு சுப்பிரமணி சிகிச்சை பலனின்றி நேற்று உயிரிழந்தார்.
from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம் https://ift.tt/FAWLPH1
0 Comments