Crime

சிவகாசி: சிவகாசியில் வருமான வரித்துறை அதிகாரிகள் போல் நடித்து பட்டாசு விற்பனை ஏஜென்டிடம் ரூ.10 லட்சம் மோசடி செய்த திமுக பிரமுகர் உட்பட 4 பேரை போலீஸார் கைது செய்து சிறையில் அடைத்தனர்.

சிவகாசி அருகே விஸ்வநத்தம் பகுதியை சேர்ந்தவர் நல்லையா மகன் சவுந்தர்ராஜ்(55). இவர் பட்டாசு விற்பனை தொழில் செய்து வருகிறார். இவர் கடந்த திங்கள் கிழமை வீட்டில் இருந்த போது காலை 11 மணி அளவில் காரில் இவரது வீட்டிற்கு வந்த இருவர் வருமான வரித்துறை அதிகாரிகள் எனக்கூறி உள்ளனர். முறையாக வருமான வரி செலுத்தாமல் முறைகேடு செய்ததாக கூறிய அவர்கள், நடவடிக்கை எடுக்காமல் இருக்க ரூ.50 லட்சம் பணம் கேட்டு உள்ளனர்.



from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம் https://ift.tt/YI9GoWM

Post a Comment

0 Comments