
சென்னை: சென்னை காளிகாம்பாள் கோயில் பூசாரி கார்த்திக் முனுசாமி என்பவர் தன்னை திருமணம் செய்து கொள்வதாகக்கூறி பாலியல் வன்கொடுமை செய்ததாக, சாலிகிராமத்தை சேர்ந்த இளம்பெண் ஒருவர் போலீஸில் புகார் அளித்திருந்தார். அதன் அடிப்படையில் விருகம்பாக்கம் அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் பாலியல் வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது.
இந்த வழக்கில் கார்த்திக் முனுசாமிக்கு எதிராக லுக்-அவுட் நோட்டீஸ் பிறப்பித்த போலீஸார், அவரை தேடி வருகின்றனர். இந்நிலையில் கார்த்திக் முனுசாமி தனக்கு முன்ஜாமீன் கோரி சென்னை உயர் நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்துள்ளார். அந்த வழக்கு நிலுவையில் உள்ளது.
from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம் https://ift.tt/M2Yeo8J
0 Comments