
தூத்துக்குடி: கிறிஸ்தவ மதத்துக்கு மாறினால் ரூ.10 கோடி தருவதாகக் கூறி கோவில்பட்டி இளைஞரிடம் ரூ.5 லட்சம் மோசடி செய்தவரை போலீஸார் கைது செய்தனர்.
தூத்துக்குடி மாவட்டம் கோவில்பட்டியைச் சேர்ந்த இளைஞர் ஒருவருக்கு ஐஎம்ஓ என்ற செயலி மூலமாக, சொக்கநாதன் என்ற ஐடியில் இருந்து ஒருவர் தொடர்பு கொண்டு பேசியுள்ளார். இந்து மதத்தில் இருந்து விலகி,கிறிஸ்தவ மதத்துக்கு மாறினால் ரூ.10 கோடி தருவதாக அவர்கூறியுள்ளார். மேலும், அமெரிக்காவில் வங்கிக் கணக்கு தொடங்கவேண்டும், வருமான வரி செலுத்தவேண்டும் என்று கூறி, அதற்காக பணம் கேட்டுள்ளார்.
from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம் https://ift.tt/Xz7Z6lt
0 Comments