
ஸ்ரீவில்லிபுத்தூர்: கல்லூரி மாணவிகளை தவறாக வழிநடத்திய வழக்கில் பேராசிரியர் நிர்மலா தேவி குற்றவாளி என மாவட்ட விரைவு மகளிர் நீதிமன்றம் தீர்ப்பளித்தது. தண்டனை விவரம் இன்று அறிவிக்கப்படும் என நீதிபதி பகவதியம்மாள் தெரிவித்துள்ளார்.
விருதுநகர் மாவட்டம் அருப்புக்கோட்டையில் உள்ள தனியார் கல்லூரியில் பேராசிரியையாக பணியாற்றியவர் நிர்மலா தேவி (56).இவர், மதுரை காமராசர் பல்கலைக்கழக பெயரை கூறி, தனது மாணவிகளை தவறாக வழிநடத்த முயன்றது தொடர்பான ஆடியோ சமூக வலைதளங்களில் வெளியானது. இதைத் தொடர்ந்து, அவர் இடைநீக்கம் செய்யப்பட்டார்.
from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம் https://ift.tt/03yBRnW
0 Comments