Crime

மும்பை: மும்பை விமான நிலையத்தில் மேற்கொண்ட பரிசோதனையில் ரூ.4.44 கோடி மதிப்பிலான 6.8கிலோ தங்கம், ரூ.2.02 கோடி மதிப்பிலான வைரங்கள் பறிமுதல் செய்யப்பட்டன. இது தொடர்பாக 4 பயணிகள் கைது செய்யப்பட்டனர். இதுகுறித்து சுங்கத்துறை வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பு:

கடந்த வார இறுதியில் மும்பைவிமான நிலையத்தில் பயணிகளிடம் பரிசோதனை நடத்தப்பட்டது. இதில் மும்பையில் இருந்து பாங்காக் நோக்கி புறப்பட்ட இந்தியப் பயணி ஒருவரின் ட்ராலிபேக்கில் நூடுல்ஸ் பாக்கெட்டுகளில் மறைத்து வைக்கப்பட்டிருந்த ரூ.2.02 கோடி மதிப்பிலான வைரங்கள் பறிமுதல் செய்யப்பட்டன. இதையடுத்து அந்தப் பயணி கைது செய்யப்பட்டார்.



from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம் https://ift.tt/c0riz8u

Post a Comment

0 Comments