Crime

ஶ்ரீவில்லிபுத்தூர்: ஸ்ரீவில்லிபுத்தூர் அருகே மதுரை - கொல்லம் தேசிய நெடுஞ்சாலையில் தற்காலிக தரைப் பாலத்தில் ஆம்னி பேருந்து கவிழ்ந்து விபத்துக்குள்ளானதில், பெண் உட்பட இருவர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர். காயமடைந்த 19 பேர் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.

தென்காசியில் இருந்து நேற்று இரவு தனியார் ஆம்னி பேருந்து 20-க்கும் மேற்பட்ட பயணிகளுடன் கோயம்புத்தூர் நோக்கி புறப்பட்டது. இரவு 11 மணி அளவில் மதுரை - கொல்லம் தேசிய நெடுஞ்சாலையில் சென்று கொண்டிருந்த போது, ஶ்ரீவில்லிபுத்தூர் - கிருஷ்ணன்கோவில் இடையே தனியார் கல்லூரி அருகே பாலம் கட்டுமான பணிக்காக அமைக்கப்பட்டு உள்ள தரைப்பாலத்தில் சென்ற போது, ஆம்னி பேருந்து கவிழ்ந்து விபத்துக்குள்ளானது. தகவலறிந்து வந்த தீயணைப்பு துறையினர் மற்றும் பொதுமக்கள் பேருந்தில் சிக்கி இருந்தவர்களை மீட்டனர்.



from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம் https://ift.tt/kR5MIOa

Post a Comment

0 Comments