
சிவகங்கை: காளையார்கோவில் அருகே 6 மாணவிகளுக்கு பாலியல் தொல்லை கொடுத்த வழக்கில், அரசு பள்ளி தலைமை ஆசிரியருக்கு இரட்டை ஆயுள் தண்டனை விதித்து, சிவகங்கை போக்சோ சிறப்பு நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
சிவகங்கை மாவட்டம், காளையார்கோவில் அருகே பெரியநரிக்கோட்டை ஊராட்சி ஒன்றிய தொடக்கப் பள்ளி தலைமை ஆசிரியராகப் பணிபுரிந்தவர் முருகன் (62). அவர் கடந்த 2015-ம் ஆண்டு ஏப்ரலில் 4 மற்றும் 5-ம் வகுப்பு படித்த 6 மாணவிகளுக்கு பாலியல் தொல்லை கொடுத்துள்ளார்.
from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம் https://ift.tt/MB0Y8iL
0 Comments