Crime

புதுடெல்லி: பிறந்த பச்சிளம் குழந்தைகள் டெல்லியில் விற்கப்படுவது தொடர்பாக மத்திய புலனாய்வுத் துறைக்குதகவல் கிடைத்தது. அதனடிப்படையில் சிபிஐ அதிகாரிகள் டெல்லி கேஷவ்புரத்தில் உள்ள ஒரு வீட்டில்நேற்று சோதனை நடத்தினர். அங்குகடத்தி வைக்கப்பட்டிருந்த 3 பச்சிளம் குழந்தைகளை மீட்டனர்.

மருத்துவமனையில் பிறந்தவுடன் இந்த குழந்தைகளை கடத்தி விற்க திட்டமிட்ட பெண், கடத்தலுக்குத் உதவிய மருத்துவமனை ஊழியர் மற்றும் மேலும் சில பெண்கள் உட்பட இதுவரை 7 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். அவர்களிடம் தீவிர விசாரணை நடைபெற்று வருகிறது. இவர்கள் 7-இல் இருந்து 8 குழந்தைகள் வரை டெல்லியில் விற்றிருப்பது தெரியவந்துள்ளது.



from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம் https://ift.tt/BNEPXh8

Post a Comment

0 Comments