
சென்னை: வேளச்சேரியில் ரியல் எஸ்டேட் அதிபர்கொலை செய்யப்பட்ட வழக்கில் தலைமறைவாக இருந்த மேலும் ஒருவர்கைது செய்யப்பட்டார். அவர் நேபாளத்திலிருந்து டெல்லி திரும்பியபோது பிடிபட்டுள்ளார்.
இதுகுறித்து போலீஸ் தரப்பில் கூறப்படுவதாவது: சென்னை தி.நகர், மேட்லி 2-வதுதெருவைச் சேர்ந்தவர் பழனிச்சாமி (60). ரியல் எஸ்டேட் தொழில் அதிபரான இவர் கடந்த 29-ம் தேதி மாலை வேளச்சேரி தாலுகா அலுவலகம் ரோடு சந்திப்பு அருகே நடந்து சென்றுகொண்டிருந்தார். அப்போது, அங்குஇருசக்கர வாகனங்களில் வந்த கும்பல் கத்தியால் தாக்கி கொலை செய்துவிட்டுத் தப்பியது. இதுகுறித்து தரமணிகாவல் நிலைய போலீஸார் விசாரணை நடத்தி வந்தனர். தலைமறைவான கொலையாளிகளைப் பிடிக்க தனிப்படை அமைக்கப்பட்டது.
from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம் https://ift.tt/fvCoJ16
0 Comments