
மும்பை: இந்திய கிரிக்கெட் வீரர்கள் ஹர்திக் பாண்டியா, க்ருணால் பாண்டியாவின் அண்ணன் வைபவ் பாண்டியா, பண மோசடி வழக்கில் கைது செய்யப்பட்டுள்ளார். ரூ.4 கோடி மோசடி செய்த காரணத்துக்காக அவரை மும்பை போலீஸார் கைது செய்துள்ளனர்.
மும்பை நகர காவல் துறையின் பொருளாதார குற்றப்பிரிவினர் கடந்த திங்களன்று (ஏப்.8) 37 வயதான வைபவ் பாண்டியாவை நம்பிக்கை மோசடி, மிரட்டல், சதி மற்றும் அது சார்ந்த பிற பிரிவுகளின் கீழ் கைது செய்ததாக தெரிவித்துள்ளனர். சகோதரர்கள் மூவரும் இணைந்து தொடங்கிய தொழில் நிறுவனத்தில் அவர் இந்த மோசடியை செய்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம் https://ift.tt/YKl81Mg
0 Comments