
கிருஷ்ணகிரி: கிருஷ்ணகிரி அருகே மாங்கூழ் தொழிற்சாலையில் இருந்து மர்ம நபர்கள் சிலர் மூலம் கென்யாவில் உள்ள ஒரு தனியார் நிறுவத்தின் பெயரில் போலி ஆர்டர் செய்யப்பட்டு, ரூ.73 லட்சம் மதிப்பிலான 120.4 டன் மாங்கூழ் ஏற்றுமதி ஆனது தொடர்பாக சைபர் கிரைம் போலீஸார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
கிருஷ்ணகிரி மாவட்டம் சாப்பர்த்தி அடுத்த கருத்தமாரம்பட்டியை சேர்ந்தவர் ரமேஷ்குமார் (59). இவர் 'நியூஜென் அக்ரோ புராசசர்ஸ் பி.லிமிடட்' என்கிற மாங்கூழ் தொழிற்சாலையில் நிர்வாக இயக்குநராக உள்ளார். இவரின் அலுவலக மின்னஞ்சலுக்கு கடந்த 2023-ம் ஆண்டு அக்டோபர் மாதம் 25-ம் தேதி, கென்யா நாட்டில் உள்ள ஒரு தனியார் நிறுவன பெயரில் மெயில் ஒன்று வந்தது.
from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம் https://ift.tt/lUZQvNB
0 Comments