
புதுடெல்லி: மும்பை விமான நிலையத்தில் ரூ. 4.81 கோடி மதிப்பிலான 8.10 கிலோ தங்கத்தை உடலுறுப்புக்குள் பதுக்கி வைத்து கடத்தமுயன்ற 6 பேரை மும்பை அதிகாரிகள் கைது செய்தனர்.
வழக்கை விசாரித்த மும்பை சுங்கத்துறை ஆணையர் கூறியதாவது: மும்பையில் உள்ள சத்ரபதி சிவாஜி மகாராஜ் சர்வதேச விமான நிலையத்திற்கு வந்திருந்த பயணிகளில் ஆறு பேரிடமிருந்து கடந்த ஏப்ரல் 6 மற்றும் ஏப்ரல் 7-ம் தேதிகளில் ரூ.4. 81 கோடி மதிப்பிலான 8.10 கிலோ தங்கம் கைப்பற்றப்பட்டது. தங்களது ஆடைக்குள்ளும், உடலுறுப்புக்குள்ளும் அவர் கள் தங்கத்தைப் பதுக்கி வைத்துக் கடத்தி செல்ல முயன்றனர்.
from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம் https://ift.tt/xnpJ403
0 Comments