Crime

பெங்களூரு: கர்நாடக மாநில தலைநகர் பெங்களூருவில் போதைப்பொருள் கடத்திய குற்றத்துக்காக உணவு டெலிவரி பிரதிநிதி ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார். அவரிடமிருந்து ரூ.10 லட்சம் மதிப்பிலான கஞ்சா பறிமுதல் செய்யப்பட்டுள்ளது. மத்திய குற்றப்பிரிவின் போதைப்பொருள் தடுப்புப் பிரிவு போலீஸார் இந்த நடவடிக்கையை எடுத்துள்ளனர்.

கைது செய்யப்பட்ட நபரின் பெயர் பாப ஜோதி டோலி என போலீஸார் தெரிவித்துள்ளனர். அசாம் மாநிலத்தை சேர்ந்தவர். சுமார் 7 ஆண்டுகளுக்கும் மேலாக பெங்களூருவில் அவர் உணவு டெலிவரி பிரதிநிதியாக பணியாற்றி வந்துள்ளார். தனது சொந்த ஊரில் இருந்து கஞ்சாவை வர வைத்துள்ளார். அதனை தான் குடியிருக்கும் வாடகை வீட்டில் வைத்து, வாடிக்கையாளர்களுக்கு விற்பனை செய்துள்ளார்.



from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம் https://ift.tt/uHdIR6j

Post a Comment

0 Comments