
பெங்களூரு: பெங்களூருவில் உள்ள ராமேஷ்வரம் கஃபே உணவகத்தில் கடந்த 1-ம் தேதி குண்டுவெடித்ததில் 10 பேர் காயமடைந்தனர். இது குறித்து தேசிய புலனாய்வு முகமை (என்ஐஏ) அதிகாரிகள் விசாரணை நடத்தி வருகின்ற‌னர்.
இது தொடர்பாக தமிழ்நாடு, உத்தர பிரதேசம் ஆகிய மாநிலங்களிலும் 18 இடங்களில் சோதனை நடத்தினர். இந்நிலையில் நேற்றுமுன்தினம், இந்த சதி செயலுக்கு உடந்தையாக இருந்தமுஷம்மில் ஷெரீப் கைது செய்யப்பட்டார். அவரை பெங்களூரு சிறப்பு நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி, 7 நாட்கள் காவலில் எடுத்து விசாரித்து வருகின்றனர்.
from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம் https://ift.tt/Btodeum
0 Comments