
திருச்சி: திருச்சி மாவட்டம் மணப்பாறை சடையம்பட்டி கிராமத்தைச் சேர்ந்தவர் வீரப்பன். விவசாயி. இவரதுமாமா முத்து என்பவர், 2005-ல்தனக்குச் சொந்தமான நிலத்தில் இருந்த தேக்குமரத்தை வெட்டினாராம். அவர் மீது வழக்கு பதிவுசெய்து, அபராதம் விதிக்காமல் இருப்பதற்காக, ரூ.3 ஆயிரம் லஞ்சம் கொடுக்குமாறு அப்போதைய மணப்பாறை வனச் சரகர்ஜனகராஜன்(71), வனக் காவலர் ராமலிங்கம்(64) ஆகியோர் தெரிவித்துள்ளனர்.
லஞ்சம் கொடுக்க விரும்பாத வீரப்பன், தனது மாமா முத்துவிடம் லஞ்சம் கேட்டவர்கள் மீது நடவடிக்கை எடுக்குமாறு திருச்சி லஞ்ச ஒழிப்புத் துறையில் புகார் அளித்தார்.
from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம் https://ift.tt/IDLdWlT
0 Comments