
கிருஷ்ணகிரி: கிருஷ்ணகிரி அருகே வடமாநில தொழிலாளர்களை தாக்கிய வழக்கில் 8 பேரை போலீஸார் கைது செய்தனர். கிருஷ்ணகிரி அருகே செம்படமுத்தூர், துறிஞ்சிப்பட்டி மற்றும் தாளப்பள்ளி கிராமத்தில் நேற்று முன்தினம் காகிதம் மற்றும் பிளாஸ்டிக் சேகரிக்கும் வடமாநில தொழிலாளர்கள் 5 பேரை குழந்தைகளை கடத்தும் கும்பல் என நினைத்து கிராம மக்கள் தாக்கினர். தகவல் அறிந்து அங்கு வந்த கிருஷ்ணகிரி நகர போலீஸார், 5 பேரையும் மீட்டு அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்கு சேர்த்தனர்.
மேலும், இதுதொடர்பாக பொதுமக்கள் 25 பேர் மீது வழக்குப் பதிவு செய்தனர். இந்நிலையில் நேற்று 8 பேரை போலீஸார் கைது செய்தனர். இதனிடையே, காவல்துறை வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பில், “குழந்தைகளை கடத்துவதாக தவறான செய்திகளை கேட்டறிந்து வடமாநில தொழிலாளர்கள் மீது தாக்குதல் நடத்துவோர் மீதும், சமூக வலைதளத்தில் தவறான தகவலை பகிர்வோர் மீதும் சட்டப்படி நடவடிக்கை எடுக்கப்படும்.
from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம் https://ift.tt/XQteq9b
0 Comments