
தூத்துக்குடி: தூத்துக்குடியில் மோட்டார் சைக்கிளில் வந்து மர்ம நபர்கள், 4 மாத பெண் குழந்தையைக் கடத்திச் சென்றனர். அவர்களைப் பிடிக்க தனிப்படை அமைக்கப்பட்டுள்ளது.
வேலூர் மாவட்டம் குடியாத்தம் பகுதியைச் சேர்ந்தவர் சந்தியா(25). கணவர் கைவிட்டதால், தனது 4 மாத பெண் குழந்தையுடன் அண்மையில் தூத்துக்குடி வந்துள்ளார். தூத்துக்குடி வி.இ. சாலையில், அந்தோணியார் ஆலயம் அருகே சாலையோரம் தங்கி, யாசகம் பெற்று வாழ்கிறார்.
from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம் https://ift.tt/WftDg4T
0 Comments