
சென்னை: சென்னை, கொண்டித்தோப்பு, சபாபதி 2-வது தெருவில் வசித்து வருபவர் மகேந்திர குமார் பட்டேல்(45). இவர் கடந்தமாதம் 28-ம் தேதி, வால்டாக்ஸ் சாலையில் ஒரு ஷேர் ஆட்டோவில் சென்று கொண்டிருந்தார். அப்போது, ஆட்டோவில் இருந்த ஒரு பெண் உட்பட 2 பேர் மகேந்திரகுமாரிடம் பேச்சுகொடுத்தனர். திடீரென, நீங்கள் கூறிய இடத்துக்கு ஆட்டோசெல்லாது எனக்கூறி அவரை பாதி வழியில் இறக்கிவிட்டனர்.
கீழே இறங்கிய மகேந்திரகுமார் சிறிதுநேரம் கழித்து பார்த்தபோது, அவர் சட்டைப் பையில் வைத்திருந்த ஐபோன் திருடு போயிருந்தது தெரியவந்தது. உடனடியாக அவர் இதுகுறித்து ஏழுகிணறு காவல் நிலையத்தில் புகார் கொடுத்தார்.அதன்படி, துணை ஆணையர் ஸ்ரேயா குப்தா தலைமையிலான போலீஸார் வழக்குப் பதிந்தனர். சிசிடிவி கேமரா பதிவுகளைக் கைப்பற்றி விசாரணை மேற்கொண்டனர்.
from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம் https://ift.tt/n264m9k
0 Comments