Crime

நாகர்கோவில்: கன்னியாகுமரி மாவட்டம் பூதப்பாண்டி அருகே தொழிலாளி கொலை செய்யப்பட்ட வழக்கில், அண்ணன், தம்பி உள்ளிட்ட 5 பேருக்கு ஆயுள் சிறை தண்டனை விதிக்கப்பட்டது. பூதப்பாண்டி ஆருகேயுள்ள திட்டுவிளையைச் சேர்ந்த நேசமணி என்பவரது மகன் முத்துராஜ் (34). தொழிலாளி. இவரது பெரியப்பா ஞானசிகாமணியின் மகன்கள் செல்வன்(33), செல்வசிங்(32).

சொத்து தகராறில் முன்விரோதம்: நேசமணிக்கும், ஞானசிகாமணிக்கும் இடையே சொத்து தகராறு இருந்து வந்தது. இந்நிலையில், 2005 ஆகஸ்ட் மாதம் 28-ம்தேதி, சொத்து தொடர்பாக அவர்களிடையே பேச்சுவார்த்தை நடந்துள்ளது. அப்போது முத்துராஜ்தனது பெரியப்பா ஞானசிகாமணியை தாக்கியதாகக் கூறப்படுகிறது.



from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம் https://ift.tt/fGv0n8L

Post a Comment

0 Comments