Crime

ஆவடி: ஆவடி அருகே உள்ள பட்டாபிராம்-பாரதியார் நகரை சேர்ந்தவர் சின்னத்தம்பி. இவரது மனைவி மீனலோச்சனி (40). இவர் கடந்த மாதம் 17-ம் தேதி பட்டாபிராம் பகுதியில் நடந்து சென்று கொண்டிருந்தார். அப்போது, மோட்டார் சைக்கிளில் வந்த நபர்,மீனலோச்சனி அணிந்திருந்த4 பவுன் சங்கிலியை பறித்துக் கொண்டு தப்பினார்.

இதுகுறித்து, பட்டாபிராம் குற்றப்பிரிவு போலீஸார் வழக்குப் பதிவு செய்து தீவிர விசாரணை மேற்கொண்டனர். அப்போது மீனலோச்சனியிடம் சங்கிலி பறித்த நபர், திருவேற்காடு, அன்பு நகர் பகுதியைச் சேர்ந்த மிட்டாய் கார்த்திக் என்கிற கார்த்திக் (27) என்பதும், அவர் ஏற்கெனவே திருவேற்காடு, ஆவடி, திருநின்றவூர், செங்குன்றம் உள்ளிட்ட காவல் நிலையங்களின் எல்லைகளில் நடைபெற்ற 20-க்கும் மேற்பட்ட வழிப்பறி, சங்கிலி பறிப்பு வழக்குகளில் தொடர்புடையவர் என்பதும் தெரியவந்தது.



from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம் https://ift.tt/zXRTc2i

Post a Comment

0 Comments