
சென்னை: தேர்தல் நடத்தை விதிமுறைகள் அமலுக்கு வந்த நிலையில், சென்னை சென்ட்ரல் ரயில் நிலையத்தில் ரயில்வே காவல் ஆய்வாளர் கோவிந்தராஜ் தலைமையிலான ரயில்வே போலீஸார் நேற்று முன்தினம் இரவு தீவிர கண்காணிப்பு பணியில் ஈடுபட்டிருந்தனர்.
அப்போது, பயணிகள் காத்திருப்போர் அறை அருகே ஒரு இளம் பெண் நீண்ட நேரமாக நின்று கொண்டிருந்தார். இதைக் கண்ட ரயில்வே போலீஸார், சந்தேகத்தின் பேரில் அவரைப் பிடித்து விசாரித்தனர். மேலும் அவரது பையைச் சோதித்தபோது, அதில் ரூ.1.40 லட்சம் மதிப்புள்ள 7 கிலோ கஞ்சா பொட்டலங்கள் இருந்தன.
from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம் https://ift.tt/laLIJo8
0 Comments