
சென்னை: கஞ்சா உள்ளிட்ட போதைப் பொருட்கள், குட்கா உள்ளிட்ட புகையிலைப் பொருட்களுக்கு எதிராக சென்னை போலீஸார் கடும் நடவடிக்கை எடுத்துவருகின்றனர். அதன்படி, ரோந்து மற்றும் கண்காணிப்பு பணி முடுக்கி விடப்பட்டுள்ளது.
இந்நிலையில் சென்னையில் கடந்த 6-ம் தேதியில் இருந்து 11-ம் தேதி வரையிலான 6 நாட்களில் போதைப் பொருள் விற்றதாக 29 வழக்குகள் பதியப்பட்டு, 55 வியாபாரிகள் கைது செய்யப்பட்டுள்ளனர். இவர்களிடமிருந்து 63 கிலோ கஞ்சா, 60 கிராம் போதைப் பொருள், 1752 போதை மாத்திரைகள் பறிமுதல் செய்யப்பட்டன.
from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம் https://ift.tt/RuZja63
0 Comments